"மூலிகைச் செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்"


கோவை, நவம்பர் 6: தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 



 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

"தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை செடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வறட்சி காரணமாக தமிழகத்தில் அழிந்து வந்த பல மூலிகை செடிகள் தற்போதைய பருவ மழை காரணமாக துளிர் விட்டு வரும் இந்நிலையில் அவற்றை முறையாக பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். 

மேலும், தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க 'தனி குழு' ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டும்". 

முன்னதாக, மூலிகை செடிகளை ஏந்தியவாறு விவசாயி சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...